பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 பற்றி வேதவியாசர் காலத்துக்கு முற்பட்டவர் தொல் காப்பியனார் என்றும் கூறுதல் பொருத்தமின்று". 1 ஆகவே நச்சினார்க்கினியர் கூற்று இங்கும் பயன்படாது. அதர்வண வேதம் ஒரு வேதமாக ஒப்புக்கொள்ளப் பட்டு, நான்கு வேதங்கள் என்ற எண்ணிக்கை கொண் டது மிக மிகப் பிற்பட்ட காலத்தில்தான் என்று வரலாற்றாசிரியர் தத்தர் கூறுகின்றார் 2 ஆதலின் மிக முற்பட்ட நூலான தொல்காப்பியப் பாயிரத்தில் நான் மறை என்று சுட்டப்பட்டது ஆரிய நான்கு வேதங் களாக இருத்தல் இயலாது. அன்றியும் தென்னாட்டுத் தமிழர் ஒருவர் வடநாட்டு ஆரிய மொழியில் உள்ள நான்கு வேதங்களையும் முற்றக் கற்றல் அவ்வளவு எளிதன்று. ஆசிய மொழியில் நல்ல பயிற்சியும் புலமையும் உடைய ஆரியரே, வேதம் ஒன்றினை முழு வதும் கற்று முற்றுப்பெற்ற புலமையுடையராதல் எளிதன்று, அங்ஙனமாகவும், ஆரிய மறைகளைக் கற்ப தற்கு உரிமையற்றிருந்த தமிழர் கூட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் ஆரிய நான் மறைகளை முற்றக் கற்றார் என்று கூறுதல் முற்றும் பொருந்தாது. ஆதலின் நான் மறை என்பது தமிழ் நான்மறையாகத்தான் இருத்தல் கூடும் என்பதில் எட்டுணையும் ஐயமின்று. ஆதலின் ஆரிய மறைகள் நான்காக வகுக்கப்பட்ட பின்னரே தொல்காப்பியர் வாழ்ந்திருத்தல் வேண்டும் எனக்கருதி அவர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட வர் என்று முடிவு கட்டுதல் தவறுடைத்தாகும். ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் : "ஐந்திர வியாகரணத்தை நிறைய அறிந்த பழைய காப்பியக் குடியினுள்ளோன்' என இத் தொடர்க்குப் பொருள் Dr. P. S. S. சாஸ்திரியார் தொல்-எழுத்ததிகாரம் முகவுரை பக்கம்-1. 2 R. C. Dutt. Early Hindu Civilization. Page 116.