பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புப் படையல் கல்விப் பணியே கடவுட் பணியென அன்புடன் ஆற்றும் அண்ணலார் தம்பி; புன்னகை தவழும் இன்முகம் கொண்டே எவர்க்கும் உதவும் இனிமை நண்பர்; செல்வர்க் கழகாம் செழுங்கிளை தாங்கும் பண்பின் புகலிடம்: பணிவின் புகழிடம்; திருக்குறட் கழகச் சீர்மிகு செவிலி; பிறர்க்கென வாழும் பெற்றிமை போற்றி ஒல்லும் வகையால் உயர்பணி புரியும் கோவிந்த சாமியாம் குணன்உயர் குரிசிற்கு இன்புறு படையலாய் இந்நூலை அன்புடன் அளிப்பல்; அடைகபல் புகழே - ஆசிரியர்.