பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.32 பொருளதிகாரம் பெருமையிற் பெயர்ப்பினு முலகுரைத் தொழிப்பினும் அருமையி னகற்சியு மவளறி வுறுத்துப் பின்வா வென்றலும் பேதைமை யூட்டலும் முன்னுறு புணர்ச்சி முறைநிறுத் துரைத்தலும் அஞ்சியச் சுறுத்தலு முரைத்துழிக் கூட்டமொ(டு) எஞ்சாது கிளந்த விருநான்கு கிளவியும் வந்த கிழவனை மாயஞ் செப்பிப் பொறுத்த காரணங் குறித்த காலையும் புணர்ந்தபின் னவன்வயின் வணங்கற் கண்ணுங் குறைந்தவட் படரினு மறைந்தவ ளருகத் தன்னொடு மவளொடு முன்னமுன் நளைஇப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும் நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தினும் எண்ணரும் பன்னகை கண்ணிய வகையினும் புணர்ச்சி வேண்டினும் வேண்டாப் பிரிவினும் வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தினும்" புணர்ந்துழி யுணர்ந்த வறிமடச் சிறப்பினும் ஒம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணு செங்கடு மொழியாற் சிதைவுடைத் தாயினும் என்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇய்)" அன்புதலை யடுத்த வன்புறைக் கண்ணும் ஆற்றது தீமை யறிவுறு கலக்கமுங் காப்பின் கடுமை கையற" வரினுங் களனும் பொழுதும் வரைநிலை' விலக்கிக் காதன் மிகுதி யுளப்படப் பிறவும் நாடு மூரு மில்லுங் குடியும் பிறப்புஞ் சிறப்பு மிறப்ப" நோக்கி(ய்) அவன்வயிற் றோன்றிய கிளவியொடு தொகைஇ(ய்) அனைநில' வகையான் வரைதல் வேண்டினும் ஐயச் செய்கை தாய்க்கெதிர் மறுத்துப் பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினும்