பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூன் மரபு 7 27. ஞநமவ வென்னும் புள்ளி முன்னர் யஃகா னிற்றன் மெய்பெற் றன்றே. 27. 28 மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும். 38. பதிப்புகள் 77, 85 இரண்டிலும் இந் நூற்பாவிற்குமுன் அவற்றுள் என்னும் சொற்சீரடி சேர்க்கப் பெற்றுள்ளது. இதற்குச் சுவடிச் சான்றில்லை. 29. யரழ வென்னும் புள்ளி முன்னர் முதலா கெழுத்து ங்கரமொடு தோன்றும். 29 பா.வே. 1. கெழுத்தும் - சுவடி 10:52, பிழை உம்மை தேவையற்றது JO. மெய்ந்நிலை சுட்டி னெல்லா வெழுத்தும் தம்முற் றாம்வரூஉம் ரழவலங் கடையே 30 பா.வே. 1. மெய்நிலை - சுவடி 10:53, சந்திப்பிழை. 2. மெய்நிலைச் சுட்டி - பதிப்புகள் 40, 47 3. வரும் - சுவடி 115. பிழை, அளபெடை விடுபாடு. 31. அஇ உஅம் மூன்றுஞ் சுட்டு. 31 32. ஆஏ ஒ'அம் மூன்றும் வினா. 32. வேங்கட." இச் சூத்திரத்தில் வினாஅ என்னும் சொல்லின்கண் ஆகாரம் அளபெடுத்து நிற்றல் வேண்டும்" என்பார். ஆசி, "சுவடிகள் எவற்றிலும் அளபெடையில்லை" என்பார். (பதிப்பு 52 பக். 135.) பதிப்பு 77 இல் வினாஅ என அளபெடை காணப்படுகிறது.