பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 தலைவன் தலைவியின் மார்பைத் தழுவ விரும்பு கிறான். தென்னங் குரும்பைப் போன்ற அவளுடைய முலைகளின் குளிர்ச்சியைத் துய்க்கத் துடிக்கிறான்.அந்நேரம் அவள் நாணத்தால் தலைவன் பக்கம் முதுகைக் காட்டித் திரும்பி நின்றாள். அப்போது அவன் அவளை நோக்கி, குரும்பை போன்ற முலைகளின் தண்மையைத் துய்க்க விரும்பும் எனக்கு முதுகைக் காட்டலாமா? என்று கூறு கிறான். இது, நூல் பெயர் தெரியாத பின்வரும் பாடல் பகுதி ஒன்றினால் அறியப்படுகிறது. "... ... ... ... ... ... ... ... ... இளங்குரும்பைத் தண்ணிர் அவாவுக்கு வெந்நீர் அளித்தல் தகுதியன்றே” என்று கூறுகிறான். குரும்பை என்பது குரும்பை போன்ற முலை. தண்ணீர் (தண்நீர்) என்பது குளிர்ந்த தன்மை. வெந்நீர் என்பதை வெந்-நீர் எனப் பிரிக்கவேண்டும். வெந்=முதுகை, நீர்=நீங்கள்,அளித்தல்-காட்டுதல் முறை யன்று என்று கூறுகிறான். இங்கே, தண்ணிர் (குளிர்ந்த பச்சைத் தண்ணிர்) விரும்பியவர்க்கு,வெந்நீர்(சூடானநீர்) அளித்தல் தகுதியன்று என்று இருபொருள் (சிலேடை) தந்து இப்பகுதி சுவை பயக்கிறது. இவ்வாறு சுவை தரும் சொற்கள் பல உண்டு. மேலும் ஒன்று வருமாறு. தனம் - மாடு: தனம் என்னும் சமசுகிருதச் சொல்லைக் கன்னட மொழி ஏற்றுக்கொண்டுள்ளது. கன்னடத்தில் இந்தச் சொல் மாடு (பசு), செல்வம் என்னும் இரு பொருளையும் தருகிறது. இதில்சுவையான செய்தி ஒன்று அடங்கியுள்ளது. தமிழிலும் இது போன்ற அமைப்பு உண்டு. தமிழில் மாடு என்பதற்குப் பசு, செல்வம் என்னும் இரு பொருளும்