பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 வது வழக்கம், மூளைக் கட்டி நோயாளியாகிய யான் மருத்துவத்திற்காகச் சென்னைக்குச் செல்லும் போதெல் லாம் என் சிறிய மாமனார் வீட்டில் தங்குவது வழக்கம். அந்த வீட்டுச் சமையல்கரார் இராமநாதபுரம் மாவட் டத்தினர். அவர் கோதுமை என்பதைக் கோதம்ப' என்று கூறுவார். நான் கோதம்ப' என்பதைக் கேட்டதும் கிண்டல் பண்ணுவது வழக்கம். எங்கள் வீட்டிற்கு வந்த பிறகும், என் மனைவியை நோக்கி இன்றைக்கு என்ன கோதம்ப உப்பு மாவா? கோதம்ப பூரியா எனக் கிண்டலாகக் கேட் பது வழக்கம், இந்த நிலை இருக்க - யான் பல்கலைக் கழகத்தில் மர இனப் பெயர்களைத் தொகுத்துக்கொண்டிருந்த போது கோதுமை என்பதன் வேறு பெயர்களை வேறுவேறு அகர முதலிகளில் கண்டு வியந்தேன். அவையாவன: கோதும்பை என்னும் பெயரைச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதியிலும், கோதமம்’ என்னும் பெயரைச் சாம்பசிவம் பிள்ளையின் தமிழ் ஆங்கில அக ராதியிலும், கோதுமம்' என்னும் பெயரை யாழ்ப்பா ணத்து மானிப்பா யகராதியிலும், கோதுரமம் என்னும் பெயரைத் திருவானைக்காப் புராணத்திலும் கண்டு வியந் தேன். 'நலத்தகு பொருள் கோதுமம்' என்பது,திருவானைக் காப் புராணம்-நான விதிப்படலம் - 25 ஆம்பாடலில், உள்ள பகுதி யாகும். மற்றும்,கோதுமைக்குக் கோதி’ என் னும் பெயரும் உண்டு என்பதைத் திவாகர நிகண்டிலும் சூடாமணி நிகண்டிலும் உள்ளதைக் கண்டேன். கோதி கோதுமை' என்பது, திவாகர நிகண்டு - மரப் பெயர்த் தொகுதியின் - 173ஆம் பாடலாகும். அடுத்து, 'தழுவு கோதுமையே கோதி’ என்பது. சூடாமணி நிகண்டு-மரப் பெயர்த் தொகுதி-39 ஆம் பாடல் பகுதி யாகும். இத்தனை