புலவர் என்.வி. கலைமணி
139
திரு. நாயுடு அவர்களது விவசாயக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய விவரங்களைப் பத்திரிக்கைகளில் படித்தேன். ஊசி மருந்து முறை மூலம் எதிர்பாராத விளைவுகளை நீங்கள் உருவாக்கி இருப்பது; மைதாஸ் என்னும் மன்னனின் தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கதை போல இருக்கிறது.
தமிழ் நாடு விவசாய
அமைச்சர் பாராட்டு!
சென்னை, மாகாணத்தில் அப்போது விவசாயத் துறை அமைச்சாரக இருந்த திரு. மாதவ மேனன் 28.10.48 அன்று எழுதிய கடிதம் இது :
"பருத்திச் செடியில் நீங்கள் செய்துள்ள சாதனை வியப்பிற் குரியது. நீங்கள் தேசீய மயமாக்கப்பட வேண்டும். உங்களது அறிவும், ஆராய்ச்சியும் நாம் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்கப் பயன்பட வேண்டும்.
மேற்கண்டவாறு எழுதப்பட்ட கடிதங்கள் எண்ணற்றவை. இவற்றுக்கெல்லாம் திரு. நாயுடு நன்றிக் கடிதங்களை எழுதியுள்ளார். அவ்வாறு அவர் எழுதிய கடிதங்கள் எத்தனை தெரியுமா? 37 ஆயிரம் கடிதங்கள் ஆகும். உலகத்தில் இவ்வளவு கடிதங்களை அவர்கள் துறை சம்பந்தமாக எழுதிய விஞ்ஞானி யார்? அதை ஆராய்ச்சிதான் செய்ய வேண்டும்.