பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



நாயுடு பெருமகனார் கண்டு பிடித்த விஞ்ஞானக் கருவிகளை உற்பத்தி செய்திட - இந்திய அரசும் சரி, மாநில அரசும் சரி, அனுமதி கூட அளிக்காததைக் கண்டு அவருடைய மனம் பூகம்பமானது:

எனவே, திரு.ஜி.டி.நாயுடு தனது, எண்ண எரிமலை வெடிப்பையும், மன பூகம்பத்தின் வெறுப்புக்களையும் இந்திய மக்களுக்கு அறிவிக்க விரும்பி, சென்னையில் ஒரு பெரிய தொழிலியல் துறைக் கண்காட்சியை எஸ்.ஐ.ஏ.ஏ.திடல் என்று நினைக்கிறேன். அங்கே, மக்கள் பார்வைக்காக நடத்திக் காட்டினார்:

அந்தக் கண் காட்சியைப் பற்றிய விவரங்களை இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயத்திலே படித்தீர்கள். மறுபடியும் நினைவுக்காக, இந்தியாவின் விஞ்ஞானி ஒருவரது மன எரிமலை வேதனைக் குமுறல்களது குழம்புகளின் வெறுப்பு எரிச்சலை உணர்வதற்காக, ஒரு தமிழனின் விஞ்ஞான விந்தைகளைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பாத தமிழ் ஆட்சியின் தமிழர்களது மன அழுக்காறுகளைப் புரிந்து கொள்வதற்காக,அவருடைய மனம் பாதித்த பூகம்ப பாதிப்பு வெடிப்புக்களை, அதாவது, "ஆக்கம் அழிவுக்கே" என்ற அவருடைய மனப் புயலை உணர்வதற்கு மீண்டும் ஒரு முறை வாசகர்களைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்! அவ்வளவுதான்!

அதற்குமேல் எதையும் எழுத, நம்முடைய தமிழ்நெஞ்சம் விரும்பவில்லை என்பதால், தமிழ் இன உணர்வே. இனியாகிலும், 'தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!' என்ற நாமக்கல் கவிஞரின் தமிழ் இன உணர்வுப் பற்றை, தன்மானத்தை, தலை நிமிர வைப்பாயா? என்று கண்ணிரைக் காணிக்கையாக்கி; கெஞ்சுகிறது- தமிழ் ஆட்சிகளை!