பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

33



அந்த ஆலை ஒன்றில், மாதம் பன்னிரெண்டு ரூபாய் சம்பளத்திற்கு துரைசாமி வேலைக்குச் சேர்ந்தார். அந்த முதலாளியின் நிருவாகம், கண்டிப்பு வேலை வாங்கும் ஒழுங்கு ஆகியவை அவருக்கு மன நிறைவை மட்டுமன்று, எதிர் காலத்தில் இவற்றை நாம் ஒழுங்காகப் பின்பற்றி நடந்தால் நல்ல நிருவாகம் செய்யும் திறமையைப் பெற முடியும் என்று துரைசாமி நம்பினார்.

பஞ்சு ஆலையில் வேலை!
12 ருபாய் சம்பளம்!

துரைசாமியின் கடமை உணர்வுகள், எஜமான விசுவாசும், வேலைத் திறமை, ஆகியவற்றை நன்கு புரிந்து கொண்ட அந்த ஆலை முதலாளி, அவரைப் பஞ்சை நிறுத்து எடை போடும் பிரிவில் வேலை செய்பவர்கட்கு தலைமைப் பொறுப்பாளராக நியமித்தார்.

இதில் குறிப்பிடத் தக்க சிறப்பு என்ன தெரியுமா? காய்ந்த மாடு கம்பங் கொல்லையில் புகுந்து கன்னா பின்னா என்று மென்று பயிரை நாசமாக்கும் நிலைபோலல்லாமல், துரைசாமி வேலையில் சேரும் போதே தனது முதலாளியிடம், ‘ஐயா, நான் இரண்டாண்டு காலம்தான் வேலை பார்ப்பேன். அதற்கு மேல் பணியாற்ற மாட்டேன். என்ன சம்மதமா ஐயா!’ என்ற ஒப்புதலைக் கேட்டுப் பெற்ற பிறகே அவர் அந்த ஆலையில் பணிக்கமர்ந்தார்.

தந்தையும் - மகனும் :
சந்தித்தாங்கள்:
இவ்வாறு துரைசாமி பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, துரைசாமியின் தந்தையார் தனது தோட்டத்தில் விளையும் பருத்தியிலே இருந்து கொட்டையை நீக்கிட அதே ஆலைக்கு வந்தார். காரணம், கோபால்சாமி நாயுடு அடிக்கடி அந்த ஆலைக்கு வந்து போவதும் வழக்கமாகும்.

ஆலையில் பஞ்சு எடை போட்டு நிறுக்கும் தலைமை எடையாளர், யார் எடை போட வந்தாலும் அவர்களது பருத்தி எடையில் பாரத்துக்கு ஐந்து ராத்தல் குறைத்துப் போட வேண்டும்.

இந்த விதி சிங்காநல்லூரில் உள்ள எல்லா ஆலைகளிலும் பொதுவாகக் கடைப்பிடிக்கப்பட்டே வந்தது. இந்த எடை போடும்