இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புலவர் என்.வி. கலைமணி
37
இரண்டாவது தடவையாக துரைசாமி நடத்திய பஞ்சு வாணிகத்திலும் அவர் வெற்றி பெற முடியாமல் போயிற்று. என்ன செய்வது?
வாணிகம் தோல்வி!
ஒன்றரை லட்சம் நட்டம்!
யார் எங்கே நடந்தாலும் அவரவர் நிழல் அவர்களைப் பின் தொடர்ந்து வருவதைப்போல, முதலாளியாக துரைசாமி மும்பை சென்றவர், மறுபடியும் தமிழ் நாட்டுக்குத் திரும்பும்போது, பழைய துரைசாமியாகவே வந்து சேர்ந்தார்!
திருப்பூரில் துரைசாமி துவங்கிய பஞ்சு ஆலையை, அதன் வாணிகம் விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது. அதனாலும், அவருக்கு எவ்விதப் பயனும், பலனும் இல்லாமல் போய் விட்டது. என்ன செய்யலாம் என்ற எதிர்காலச் சிந்தனையில் துரைசாமி மூழ்கினார்.