பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


ஆண்டுதோறும் அவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும் தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருந்தார்கள்.

ஜி.டி. நாயுடு :
ஐரோப்பா பயணம்!

குன்ஸ் தம்பதியர் அனுப்பும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை ஆண்டுதோறும் பெற்று வந்த ஜி.டி. நாயுடு அவர்கள், 1932-ஆம் ஆண்டின்போது செர்மனியின் கோடை காலத்தில் ஐரோப்பிய நாடுகளைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்.

கோயம்புத்துர் நகரிலிருந்து ஜி.டி. நாயுடு இலங்கைக்கு விமானம் மூலமாகச் சென்றார். பிறகு கொழும்பு என்ற துறைமுக நகரிலே இருந்து, கடற் பயணமாக ஜார்ஜஸ் பிலிப்பார் என்ற அழகுமிக்க நகரத்துக்கு பிரெஞ்சுக் கப்பலில் புறப்பட்டார் - அவருடன் நண்பர்கள் இருவரும் பயணம் சென்றார்கள்.

கப்பல் நான்கு நாட்களாகக் கடலில் சென்றது. ஐந்தாம் நாள் கடல் நடுவே அக் கப்பல் சென்று கொண்டிருக்கும்போதே எதிர்பாராமல் தீப்பிடித்துக் கொண்டு எரிய ஆரம்பித்தது.

கப்பலைக் காப்பாற்ற வேண்டுமானால் தீயை அனைத்தாக வேண்டும். அல்லது கப்பலையாவது காக்க வேண்டும். இரண்டுமே முடியாததால், பயணிகள் அனைவரும் உயிர் காக்கும் படகுகள் மூலமாகத் தப்பினார்கள். இவ்வாறு உயிர் பிழைத்துக் கொண்டவர்களுள் ஜி.டி. நாயுடுவின் நண்பர்கள் இருவரும் இருந்தார்கள்.

இந்த இரு நண்பர்களையும் காணவில்லை என்று ஜி.டி. நாயுடு கப்பல் தளங்களை எல்லாம் தேடிப் பார்த்தார். இதற்குமேல் அவர்களைத் தேடுவதிலேயே கவனம் செலுத்தினால், தான் உயிர் தப்ப முடியாது எனக் கருதிய நாயுடு அவர்கள், வேறோர் படகு மூலமாகத் தப்பிப் போனார்.

அந்த நேரத்தில், ஒருவர் உயிரை மற்றவர் காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகள் யாவும் நாயுடு உள்ளத்திற்குள் ஒரு வியப்பை விளைவித்தது. அக் காட்சியை அவர் தனது நண்பருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் :