பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுற்றுலாப் போன சொக்கய்யா



சொக்கய்யா ஒரு மட்டும் ஊரை விட்டுக் கிளம்புவது என்று தீர்மானித்து விட்டார். 'ஸேரி, கொஞ்சம் மாறுதலாத்தான் இருக்கட்டுமே இப்படிப் போயி அஞ்சாறு இடங்களைப் பார்த்திட்டு வரலாமேன்னுதான் என்று அவர் காரணத்தையும் ஒலி பரப்பலானார். சொக்கய்யாவைப் பொறுத்தமட்டில்,இது லேசான விஷயம் அல்ல. அவர் எடுத்தது 'மகத்தான முடிவு' ஆகும்.

சொக்கு, சொக்கய்யா என்று சிவபுரத்தினரால் குறிப்பிடப்பட்டு வந்த சொக்கங்யாப் பிள்ளைக்கு சமீபத்தில்தான் ஐம்பது வயது நிரம்பியது. 'ஐம்பதைக் கடந்து ஐம்பத்தொன்றாவது வயசில் காலெடுத்து வைத்த விசேஷத்தைக் கொண்டாடுவதற்காகவும் அவர் உள்ளம் இந்த மாபெரும் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கக் கூடும்.

அவருக்கு ஐம்பது வயது ஆகிவிட்ட போதிலும், அவர் நாலு இடங்களுக்கும் போய் வந்து அனுபவம் பெற்றவர் அல்லர் போக வேண்டிய அவசியம் எதுவும் ஏற்பட்டதில்லை என்பதல்ல, 'எதுக்காகங்துேன் வெளியூர் போய் வரணும்?' என்றுதான் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். வீட்டை விட்டு வெளியே கிளம் புவதே அவருக்குப் பிடிக்காத விஷயம் ஆகும்.

எத்தனையோ பேர் என்னனென்னவோ சொல்லி அவரைப் பரிகசித்துப் பார்த்தார்கள். குற்றாலத்துக்குப் போம். கன்னியாகுமரியைப் பாரும்! அங்கே போய்