பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174 ★ வல்லிக்கண்ணன்


“சண்டியன், கில்லாடி, ரவுடி! ஹே, சோதாப் பசங்க என்னை போலீஸ் இன்ஸ்பெக்டர்ன்னு நெனச்சி மிரண்டு போனாங்க. துணிஞ்சு அடிக்கிறவனைக் கண்ட பயப்படறவங்கதான் உலகத்திலே ஜாஸ்தி! அவங்க பிழைப்பும் அப்படித்தான் நடக்குது!”

சுயம்புலிங்கத்தின் சிந்தனையில் ஞான மின்னல் கிறுக்கிச் சிரித்தது.

சிரித்தபடி திரும்பி வந்த சுயம்புவைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார் பாஸ்கர், அவர் பேச்சைக் கேட்டுத் திகைத்துத் திணறினார்.

“கில்லாடிகளாம்! தண்டச் சோத்துத் தடியன்கள்! அவங்க உடலையும் உரத்த குரலையும் முரட்டுய் போக்கையும் கண்டு பயப்படுகிறவங்க இருக்கிறவரை, அவங்க பிசினசும் வெற்றிகரமா நடக்கும். கொஞ்சம் துணிஞ்சி, தடலடித்தனமாப் பேசி மிரட்டினால் யாரும் சண்டியன் ஆகிவிடலாம்னு தெரியுது. மனுஷங்க உள்ளத்திலே அவ்வளவு துரத்துக்கு பயம் குடியிருக்குது!” என்று சுயம்பு அளந்தார்.

அவருடைய துணிச்சலையும், புதிய போக்கையும் பற்றி என்ன சொல்வது அல்லது என்ன நினைப்பது என்றே புரியவில்லை நண்பருக்கு.


★ “தினமணிகதிர்” – 7.7.67