பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்180


அவன் பார்க்கவும் மான் போல் ஓடி ஒளியக் கண்டான். மறுநாள் மயிலென நிற்கக் கண்டான். அன்னம் போல் அசைந்து கள்ளப் பார்வை நோக்கக் கண்டான். தினந்தோறும் இவ்விதம் புதுமைகள் பலவும் கண்டான். காலம் ஒடுவதும் கருத்தில் கொண்டான்.

பார்த்தாள் பதுங்கி நின்று. முகம் முழுவதும் காட்டினாள். பின், மேனி எழில் காட்டி நின்றாள். நாணி ஓடினாள். அப்புறம் நின்று பார்க்கலானாள். நின்றவள் சிரிக்கத் துணிந்தாள். குரல் நயம் காட்டத் துணிந்தாள். ஆகவே, இவளுக்கு என்மீது காதல்தான்; வேறென்ன! என்று தீர்மானித்தான் ரகுராமன்.

காதலை வளர்க்க என்னென்னவோ செய்தான்.

ஒரு நாள் அக்குமரி வளைகள் கலகலக்க கை அசைத்தாள். வீதி வழியே சென்ற அவன் திரும்பிப் பார்த்தான். அவள் சிரிப்பது போல் தோன்றவே அவனும் சிரித்தான்.

அருகில் சென்று, 'உனக்கு என் மீது காதல் தானே?' என்று தனக்குத் தெரிந்த பாடத்தை ஒலிபரப்ப நினைத்து நின்றான்.

ரகுராமன் திடுக்கிட்டுத் திகைக்க நேரிட்டது. காரணம், தி.மு.தி.மு வென்று ஓடிவந்தார் ஒரு பெரியவர்.

ஏய் அயோக்கியப் பயலே! தெருவோடு ஒழுங் காகப் போகமுடியலியோ? நானும் தினம் தினம் கவனிக் கிறேன். இந்தப் பக்கமே முறைக்கிறது. பல்லைக் காட்டுகிறது, உருட்டி உருட்டி முழிக்கிறது. இப்படி வீனத்தனம் பண்ண உனக்கு எவ்வளவு தைரியம்?' என்று அவர் கத்தினார்.

உம்ம மகளா அவள்? அவளை கண்டிக்கிறது தானே?' என்று அவன் மனம் முனகியது. ஆனால்