பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்189

களில் முக்கியமானது" என்று அவருடைய வட்டாரத் தினர் சொல்லி மகிழ்வார்கள்.

அண்ணாச்சியின் இளம் பிராயத்தில் அந்த ஊர், பக்கத்து ஊர்களிலிருந்து 'வடக்கே போறது' என்பது அரும்பெரும் காரியமாகக் கருதப்பட்டது. அவர்களுக்கு மதுரை வரை போனாலும் சரி, மெட்ராஸ் போனாலும் சரி, 'வடக்கே போயிருக்காக' தான். அவர்களுக்கு அடுத்த தலைமுறையினருக்கு மெட்ராஸ் போவது சர்வசகஜம் ஆகிவிட்டது. டில்லி, பம்பாய், கல்கத்தா என்று போன வர்கள் உண்டு. எல்லாரும் 'வேலையா' வடக்கே போயிருப்பவர்கள் தான்.

"வே, வெள்ளைக்காரன் சொல்லுவான், 'சீ வெனிஸ் அன்ட் டய்'னு வெனிஸ் நகரத்தை பார்த்திட்டுச் சாகு'ன்னு சொன்னான். வெனிஸ் அப்படியாப்பட்ட அழகான ஊராம். நம்மளவங்களுக்கு மதுரைதான் ரொம்ப அழகான ஊரு அதனாலே 'மதுரை பாராதவன் கழுதை'ன்னு நம்ம பக்கத்திலே சொல்லிக்கிடுவாங்க, நான் ரொம்ப வயசுக்குப் பிறகுதான் மதுரைக்கு போக முடிஞ்சுது. சல்லி நடமாட்டம் நம்மகிட்டே தாராளமா இல்லாத காலம்தான் நம்ம வாழ்க்கையிலே நிறைய," என்டார் அண்ணாச்சி.

"அதுக்காக 'சாதனை புரியாமல்' இருக்க முடியுமா?"

ஒருநாள் ரயிலடியில் பெரும் பரபரப்பு, வடக்கே இருந்து வருகிற ரயிலை எதிர்பார்த்துத்தான்.

"வடக்கே போன சூரியம் பிள்ளை அண்ணாச்சி வாறாக," என்று பலரும சொன்னார்கள். அவருக்கு வேண்டியவர்கள் மாலைகளோடு நின்றார்கள். சிலர் கதர் நூல் மாலை வைத்திருந்தார்கள்.

எக்ஸ்பிரஸ் வண்டி வந்து நின்றது.