190 ☆ வல்லிக்கண்ணன்
சூரியன் பிள்ளை மிடுக்காக இறங்கி, கம்பீரமாக அப்படியும் இப்படியுமாக பார்த்தார்.
அவருடைய நண்பர்களும், வியப்பர்களும் அவரை நெருங்கி மாலைகள் அணிவித்தார்கள். “வடக்கே சென்று வெற்றியோடு திரும்பும் அண்ணாச்சி அவர்களே, வருக! வருக! அண்ணாச்சிக்கு ஜே! சூரியன் பிள்ளை அண்ணாச்சி வாழ்க!” என்ற கோஷங்கள் முழங்கப்பட்டன.
அண்ணாச்சி பெருமையோடு முறுவலித்து பெரிதாகக் கும்பிடு போட்டார்.
“பட்டணம் போயி ஏதோ காரியம் முடிச்சிட்டு வாறாரு போலிருக்கு.” இப்படி எண்ணிக் கொண்டு போனார்கள் இதர பிரயாணிகள்.
“அண்ணாச்சி தூரதொலைக்கு எங்கேடா போனாரு?” முந்தாநத்து தானே போனாரு போலிருக்கு, என்று ஒரு அப்பாவி வியப்பன் தன் நண்பனிடம் கேட்டான்.
“ஸ்ஸ்.. சத்தம் போட்டுப் பேசாதே. அண்ணாச்சி கோயில்பட்டு போயி பக்கத்து ஊரிலே ஒரு சொக்காரன் வீட்டிலே தங்கியிருந்திட்டு வாறாரு. எல்லாம் ஒரு செட்அப்பு தான்,” என்றான் நண்பன்.