பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18 ★ வல்லிக்கண்ணன்

மனிதர்கள் எதிர்பாரக்கிறபடி பரஸ்பரம்ம் மனிதர்களே நடந்து கொள்வதில்லையே! இயற்கைதானா மனிதர் எண்ணுகிறபடி-எதிர் பார்க்கிறபடி- ஆசைப்படுகிறபடி நடந்து சகாயம் பண்ணப்போகிறது.

வெயில்தான் வறட்சியைப் படுவறட்சியாக்கிக் கொண்டிருந்தது.

கிழவன் பெருமூச்செறிந்தான். கிழவி தலைமீது கைவைத்தாள். அவர்கள் எப்படி வாழ்க்கையைக் கழிப்பது? பெரும் பகுதி கழிந்துபோன வாழ்க்கைதான்-இருப்பது வாழ்வின் எஞ்சிய துணுக்குத்தான். என்றாலும், உயிர் இருக்கிறவரை, உடலின் உணர்வுகள் அவியாது இருக்கிற வரை, அவஸ்தைகளும் உண்டு தானே? அவற்றின் தேவைகளைக் கவனிக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு உண்டு அல்லவா? அவற்றைச் சரி செய்வதற்குப் போதிய வலு இல்லாது போவின் ஈடு கொடுத்துத் தாங்கிக் கொள்வதற்கு வேண்டிய தெம்பும் இல்லையென்றால் -

ஒவ்வோரு கணமும் ஒரு பிரச்னையாய், பயமாய், பூதமாய் மீரட்டுவதை எப்படித் தடுக்க முடியும்?

அவர்கள் திணறினார்கள். செயலற்றுத் திகைத்தார்கள். முனகி, முணுமுணுத்து, என்னென்னவோ பேசினார்கள். துணிந்து திட்டமிட்டார்கள்.

திட்டமிட்டபடி செயலாற்ற இயலுமா என்ற ஐயம் கிழவனுக்கு எழுந்தது. கிழவன் கிழவியைப் பார்த்தான். அவள் அவன் முகத்தையே கூர்ந்து கவனித்தாள்.

“இந்த வயசு காலத்திலே நமக்கு ஏன் தான் இந்தத் துயரமெல்லாம் ஏற்பட்டிருக்கிறதோ?” என்று முணுமுணுத்தான் கிழவன்.