பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34வல்லிக்கண்ணன்


இந்த விளையாட்டு, அல்லது நாடகம், அல்லது வீரியஸ் நட வடிக்கை எது வென்று காஞ்சனாவினால் திச்சயமாகத் தீர்மானிக்க முடியாத ஒன்று அவளுக்கு ரசிக்கத்தக்கதாகவும், சுவை மிக்கதாகவுமே இருந்தது.

அவளும் வசந்தாவும் அந்த வீட்டுக்கு முன்னால் போகிற சமையங்களில், அவள் கள்ளத்தனமாகப் பார்வையை வீசுவாள். தோழி சந்தர் பக்கம் பார்த்து விட்டு இவளை நோக்கி குறும்புத்தனமாகச் சிரிக்கையில் இவள் முகம் சிவப்பேறிவிடும்.

அவள் மட்டும் தனியாக நடக்கையில் சற்றுத் தைரியமாக அவன் முகத்தைப் பார்ப்பாள். அவன் புன்முறுவல் பூப்பதுபோல் தோன்றும். உடனே அவள் குழப்பமுற்றுத் தலை கவிழ்ந்து நடப்பாள். பிறகு. அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பான் என்ற உள்ளக் குறுகுறுப்புடன் தலைநிமிராமலே திரும்பிச் செல்வாள்.

சங்கோஜியான இந்தப் பெண்ணின் போக்குகளைச் சந்தர் ரசிக்கத் தவறவில்லை, கலகலப்பாகத் திரியும் வசந்தாவின் துணிச்சலை அவன் வெகுவாக வரவேற்றாள்.

ஒரு நாள் மாலை நேரம். காஞ்சனா சிரத்தையோடு 'மேக்கப்' செய்து கொண்டு, ஜம்மென்று அழகை எடுத்துக் காட்டும் 'டிரஸ்' அணிந்து, அவன் அந்த இடத்தில் இருப்பான் என்ற நிச்சயமான நம்பிக்கை மனசில் உற்சாகத்தையும் உவகையும் எழுப்பிவிட, "வசந்தா வீட்டுக்குப் போயிட்டு வறேன்மா" என்று "ஸ்டை"லாக வந்தாள்.

சந்தர் வழக்கமான இடத்தில் இருந்தான். ஆனால், அவள் எதிர்பாராத ஒன்றும் அவளுக்காக அங்கே காத் திருந்தது.