பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை


தமிழில் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் பழம்பெரும் எழுத்தாளர் திரு. வல்லிக்கண்ணன் அவர்கள். அவர் தற்போது நம்மோடு வாழ்ந்து வருவதும் பல புதிய-புதுமை எழுத்தாளர்கள் தோன்றுவதற்கு வழி காட்டிக் கொண்டிருப்பதும் தமிழ்ச் சமுதாயம் பெற்ற பேறாகும்.

இத்தகு பெருமைக்குரிய எழுத்தாளர். திரு. வல்லிக்கண்ணன் அவர்களின் 21 சிறுகதைகளைத் தொகுத்து "தோழி நல்ல தோழிதான்" என்று தலைப்பிட்டு வெளியிட்டுள்ளோம்.

இது பூங்கொடி வெளியிடும் இந்நூல் ஆசிரியரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு நூலாகும்.

வே. சுப்பையா
பூங்கொடி பதிப்பகம்