பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தர்ம சங்கடம்



ர்மசங்கடமான நிலைமை என்று சொல்வார்களே அப்படிப்பட்ட ஒரு நெருக்கடி நாவலாசிரியர் சுந்தரமூர்த்திக்கு ஏற்பட்டுவிட்டது. அவர் மனம் அமைதியை இழந்து தவித்தது.

அன்று அவருக்கு ஒரு முக்கியமான நாள் பல நாட்களாகவே அவர் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த விசேஷ தினம், அவருடைய எதிர்பார்ப்பை விட மிக அதிகமான எதிர்பார்த்தலுடன் அவருடைய நண்பர்களும் ரசிகர்களும் அந்த நாளின் வருகைக்காகக் காத்திருந்தார்கள் என்பதை அவர் அறிவார்.

திருநகர் தமிழ் மன்றம் தனது இரண்டாவது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டிருந்தது. சகஜமான நிகழ்ச்சிகளோடு வித்தியாசமாகவும் விசேஷமாகவும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று திருநகர் இலக்கிய ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள் . நாவலாசிரியர் சுந்தரமூர்த்தி பக்கத்து கிராமத்தில் இருக்கிறார். அவருடைய நாவல் ஒன்று புதுசாக வெளி வந்திருக்கிறது. அந்த நாவலின் அறிமுக விழாவாகவும், நாவலாசிரியரை பாராட்டி கவுரவிக்கும் விழா ஆகவும் நமது மன்ற ஆண்டு விழாவை நடத்தலாம். நமக்கும் பெருமை. நாவலாசிரியருக்கும் பெருமையாக இருக்கும். மன்ற விழாவில் புதுமை சேர்த்ததாகவும் அமையும்.”

இப்படி மன்றத்தின் துணைத்தலைவர் சதானந்தம் சொல்லவும், மற்ற அனைவரும் ஆரவாரமாக அக்