கண்களில் வேதனையும் துயரமும் கலந்திருப்பதாகத் தோன்றிற்று.
பயம், எலியைப் பூனை உலுக்குவது போல அவனை உதறிக் குதறியது. அவன் செயல் திறமற்ற சிறு குழந்தை போல் கத்தினான். அவன் முகம் விகாரமாயிற்று. அவன் கைகளும் கால்களும், வலிப்பு நோய் கண்டவை போல இழுப்புண்டன. அவன் அச்சம் நிரம்பிய ஓலத்தைப் பரப்பியவாறே தரையில் புரண்டான்.
தீயில் எரிந்து கருகிக் கொண்டிருந்து மிருகமும் பயங்கரமாகக் கத்தியது.
ராமலிங்கம் சுய உணர்வு இழந்து விட்டான்.
விடிந்து சில மணி நேரம் சென்ற கிறகு பூசாரியும், இன்னும் இரண்டு பேரும் சேர்ந்தார்கள். அவர்களுக்காக அங்கே காத்துக் கிடந்தவை.
கோயிலினுள் கட்டையாய்க் கிடந்த ராமலிங்கமும், வெளியே தீயில் கருகிக் கிடந்த ஒரு மிருகத்தின் எலும்புக்கூடும்தான்.
மிருகத்தின் எலும்புக்கூட்டை நன்கு கவனித்த கிராமவாசிகள், "ஒரு கரடி எப்படியோ மூங்கில் காட்டுத் தீயில் அகப்ப்ட்டு எரிந்து, இங்கே ஓடிவந்து கருகிச் செத்துக் கிடக்கிறது. ஐயோ பாவம் !" என்று முடிவு கட்டினார்கள்.
மலைநம்பி சிலையருகே உண்ர்வற்று உயிரற்றுக் கிடந்த ராமலிங்கத்தைப் பார்த்துப் பெருச்சிசெறிந்தார் பூசாரி. 'பாவம் பயத்துக்கு பலியாகி விட்டான்' என்று தெரிவித்தார்.
{{right|*தினமணிக்கதிர்- 0.7.66