ii.2 லா. ச. ராமாமிருதம்
ருந்தால், உனக்கே நீ யார் என்று சொல்வேனோ என்னவோ ?
ஆனால் நீ முகம் காட்டவில்லை. முதுகுதான் காட் டினாய்.
எனக்குத் தோன்றுகிறது. உன் முதுகும், அதன் மேல் உன் கூந்தலின் இருளும், நான் உன் முகம் காண, நீ எனக்குக் காட்டிய விளிப்பா ?
உன் பெயரைத் தந்தாய், சைகையும் காட்டினாய், அப்படியும் உன்னைத் தெரிந்துகொள்ள இயலாது நான் தவிக்கும் வேதனைதான் உன் ரகசியமோ ? என் அந்தரங்க ஆசையோ ?
விழிகள் துளும்பின.
தரிசனி,
கண்ணிரின் ஸ்படிகம். நாம ஜெபமணிகளாய்க் கன் னங்களில் உருண்டு உதிர்ந்து, எழுந்து கரைந்து, உலகம் அழிந்தது.
இப்படியும் நேர்வது உண்டோ ?
அடுப்பை ஊதி ஊதிப் பொன்னாவுக்கு முகமே ஊதி விட்டது.
பொன்னா.
புகை கண்ணை அடைத்துக்கொண்டு மூ ச் சு த் திணறிற்று. நெஞ்சு எரிநதது.
-பொன்னி.
இன்றைக்கு விறகும் வேடிக்கை காட்ட வேளை பார்த் துக் கொண்டதாக்கும்.
அதற்குக்கூட என்னைப் பார்த்தால் இளப்பமா யிருக்கு.
-பொன்னு.