பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்வனி - 舅黨

'இல்லை நானா தேடிக் கொண்டதுதானே! இல்லை உனக்குக்கூட கறுப்பு உதிர்ந்துதானிருக்கிறது. இடுப்பில் ஒரு டன்லம்' உருவாகிக் கொண்டிருக்கிறதே?'

"ஒண்ணுமில்லே.” அவசரமாய் அந்த இடத்தைப் புடவையால் மூடிக்கொண்டாள். எங்களுக்கே நாற்பது. வயதுக்குமேல் அப்படித்தான்.”

'நீ கொழுப்பைக் குறைத்துக் கொள்ள வேணும். வீட்டில் தினம் சப்பாத்திக் கிழங்கு நடந்துண்டிருக் கோன்னோ?” -

'ஏன் நீங்கள் போய்விட்டால், தினம் வீட்டில் சுட்ட, அப்பளமும் கொட்டு ரஸமும் இருந்தால் உங்களுக்குத் தேவலையா? -

பேச்சை மாற்றினேன், ராதை ஒரு பத்து. நிமிஷத்தில் வந்து விடுகிறேன். இங்கேயே இரு. உனக்குப் பிடித்தமான பேப்பர் ரோஸ்ட் மசாலா வாங்கி வருகிறேன்.” - . - அவள் புன்னகை புரிந்தாள். 'விருந்தாளியைக் கவனிக்க வேண்டியது நியாயம்தானே !' - -

ஆனால் நான் திரும்பி வருவதற்குள் அரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. நான் வாசலில் நுழைகையிலேயே இரு குரல்கள் கேட்டன.

‘என்ன மாமா, மாமி உள்ளூரிலே இருக்காள்னு. எனக்கு நீங்கள் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லையே. நீங்கள் ஒட்டலுக்குப் போய்த்தான் வாங்கி வரணுமா? நீங்கள் வாசலில் இருந்தே குரல் கொடுத்திருந்தால் , சேகர் என்னிடம் சொல்லியிருப்பானே!”

'ஏண்டி கல்யாணி மாமாவைப் பத்தி நானே இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியதிருக்கு எனக்குமேல் நீ. ஆசைப் படறையே!” .

அந்தப் பெண் சட்டென்று ராதை பக்கம் திரும்பி

னாள். ஆனால் ராதையின் கவனம் முழுவதும் அவள் கைக் காப்பி டம்ளரின் மேல் ஆழ்ந்திருந்தது. (எதிர்

வீட்டுக் காப்பிதான் அது. நான்தான் வாங்கி வர்