பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

垒的 லா. ச. ராமாமிருதம்

ஜ்வாலையில் குங்கிலியம் கமழ்ந்தது.

தலையை இருகைகளிலும் பிடித்துக்கொண்டு நான் உட்கார்ந்திருந்தது இன்னும் நினைவிருக்கிறது.

ഥങ്ങി 4-50, 4-55, 4-57, 4-58- -

இன்றும் டெலிபோன் மெளனமாய்த் தானிருக்கிறது. இவளை இந்த நேரத்திற்கு எதிர்பார்க்கப்பழக்கிவிட்டேன் என்பதை உணருகையில் எனக்குக் கடுங்கோபம் வந்தது. இன்று நான் தீர்த்துச் சொல்லிவிடப் போகிறேன், உன் கைப்பொம்மையாக இருக்க நான் விரும்பவில்லை என்று

டெலிபோன் அலறிற்று.

எடுக்கலாமா வேண்டாமா? எ டு க் க ல | ம | வேண் டாமா?

இவள் குரல் ஒலி என்னை எங்கே கொண்டு போய் விடும்?

இவளிவிடப்படியே நான் ஆடினால் என்னைப் பைத்தியம் பிடிக்க அடித்து விடுவாளோ? -

என் நெற்றியில் வேர்வை அரும்பிற்று இன்று ட ல் லைக் க டி த் து க் கொண்டிருந்தாலும் நாளைக்கு மோஹினிப் பிசாசு போல் தொட் ரு வா ள் . இந்த வேளைக்குப் பதில், எதிர்பாராத வேளையில் பேசுவாள்.

நான் டெலிபோனை எடுக்கையில் முற்றிலும் என் வசத்தில் இல்லை.

  • Helio; “”

"மிஸ்டர் சாலிக்ராம், நா ைள க் கு எனக்குக் கல்யாணம். விடை பெற்றுக்கொள்கிறேன்.'

மீண்டும் அந்த மறக்கமுடியாத வெற்றிச் சிரிப்பு.

டெலிபோனை அந்தப் பக்கம் வைத்தாயிற்று.

மூன்று நாள் சோறு தொண்டையில் விக்கிற்று. பித்து பிடித்தாந்போல் வளைய வந்தேன்.

ஸ்-நாதனி.

★ மணி அடிக்கிறது. நினைவு மீண்டுவிட்டாலும், ஸஅநாதனியின் அழைப்பு