ஆருவது காட்சி இடம் : - சிறைக் கொட்டடி: நேரம் : மாலை. கதையுற்ருர் : குள்ளப்பன், வில்லப்பள். . குள்ளப்பன் வில்லப்பரே! இதுதான் சிறை பார்த்திரா
எவ்வளவு வசதியாக இருக்கிறது. ズ - . வில்லப்பன் : என்னய்யா வசதி இருக்கிறது? தரை -
குண்டுங் குழியுமாயிருக்கிறது, மேல் கூரை எழுவ தும் விழுவதுமாய் இருக்கிறது. . குள் : அப்படியா ? இந்த ஊர் வீடுகளை நீர் அறியாத வர்போல் பேசுகிறீரே. அது கிடக் கட்டும். உமக்கு வேண்டிய உணவுகளைச் சொல்லலாம்.
வில்: நல்லது. சிறை உணவு பற்றி உன் நாட்டுச்
சட்டம் என்ன சொல்கிறது ?
குள் : சிறைக் கைதி எந்த வகை உணவு கேட்டா
லும் கொடுக்க வேண்டும் என்பதே சட்டம்.
வில் , அது இருக்கட்டும். உங்கள் சட்டத்தைப் பற்றிச்
சிறிதளவு விளக்கமாகக் சொல்லும்.
குள் : என்ன ? கேட்கலாம்
வில் : சட்டங்கள் சிந்தித்து உருவாக்கப்பட்டவையா ? அல்லது அவ்வப்போது தயாரித்துக் கொள்ப வையா ?