பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

அணிவேன். கல்லிழைத்த கழுத்தட்டிகை அணி வேன். வலக் கையில் மணிப் பொறியும், இடக் கையில் பொன் வளையல்களும் அணிவேன். புது மைப் போக்கு எனக்குப் பிடித்தமானவை. : புதன் பதின்மூன்று அகவை நிறைந்த நான் குறும்புக் காரன்தான். நாகரீக முடியைச் சீவி அழகு செய்து கொள்வேன். புளியங் கொட்டை நிற அரைக்காற். சட்டைக்குள் வெள்ளை நிற முழுக்கை மேற் சட் டையை விட்டு, கழுத்தில் கழுத்துக் கச்சு அணி வேன். கால் உறை யணிந்து மூடு மிதியடி அணி

கதிரவன்: இருபத்து நான்கு அகவையுடைய நான்

பகுத்தறிவுப் பாசறையினன். சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களுக்கு மதிப்பளித்துக் கடைப்பிடிப்பவன். புதுமையான தலைமுடி ஒப்பனை செய்து கொள்வேன். நாகரீகப் பூச்சிடுவேன். அரும்பு மீசை அமைத்து அதைத் தடவிக் கொள்வதில் அவாக் கொள்வேன். கருநிற முழுக்காற் சட்டையும், அதன்மேல் புதுமை, வகை மேற் சட்டையும் உடுத்து மேலே எப்போதும். கருநிறக் கம்பளிச் சிறு துண்டைக் கழுத்தைச் சுற்றி முன்புறமாகத் தாழ விடுவேன். காவில் செரும்பணிவேன். கையில் மணிப்பொறி அணி வேன். . ンジ - வெள்ளியம்பலம் : இருபத்தைந்து அகவையுடைய நான் சமூகச் சீர்திருத்தத் தொண்டன். இடுப்பு முடக் கத்தோடு பிறந்தவன் நான். அதல்ை நடக்கும் போது நிமிர முடியாமல் 'ட ' போல் முடங்கியே நடப்பேன். முன்புறம் தொங்காத நாகரீக முடி வெட்டிக் கொள்வேன். வெட்டி விடப்பட்ட அரை மீசை எனக்கு விருப்பமானது. முழுக் காற்சட்டை