பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேன் துாறல்

காற்றுக்குள் கவிதைஇட்டுக்
ககனவெளிப் பண்ணிசைத்து
ஊற்றுக்கண் திறந்துவிட்ட
உள்ளான்மப் பூரிப்பாய்

புவிச்செவிகள் புல்லரிக்கப்
புலமையுளம் தேன் டிக்கக்
கவிக்குரலில் தத்துவத்தின்
கனிவுரையைக் கேட்டிட்டோம்.

குள்ளமனம் பாறைநெஞ்சம்
கொண்டவர்க்கே சுதந்தரந்தான்
எள்ளலுறும் ஒருபொருளாய்,
'இல்லை' என ஆகும்.!

உற்றசமு தாயத்தின்
உறுப்பாகா ஒருவனையே
முற்றமுழு மனிதனென
மொழிந்திடவும் இயன்றிடுமோ?