பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நடந்து கொண்டே இரு

ஓதும்சன நாயகத்தை
ஓராட்சி முறைஎன்றோ,
தோதான சட்டங்களின்
தொகுப்புறவே அதுவென்றோ

எண்ணிவிடல் சரியல்ல!
ஏற்றமிகு சனநாயகம்
கண்ணியமாம் வாழ்க்கை முறை,
கவின் நியதி தரமனைத்தும்.

நிச்சயித்தே நிலைநிறுத்த
நிறுவியதோர் ஏற்பாடே
இச்சையுடன்-அந்தரங்க
இதயமுறு துாய்மையுடன்

வல்லசன நாயத்தின்
மாண்புணர்ந்து காத்திடுவோம்
பொல்லாத வெறியர்கள் போர்க்குணத்துத்தீயோர்கள்