பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ.சண்முகம்

6

நேரத்தை நெருங்குகிறோம் நினைவிருளுக்கப்பாலே
கொஞ்சிவரும் தென்றலது
கூவுவதை நாம் கேட்டோம்,

'அஞ்சாதே', 'அயராதே'
அவனுரைத்த பொன்னுரைகள் இவைஇரண்டே நாமின்று
ஏந்துகின்ற முன்மொழிகள்!

வானொலியில் ஞானமுனி
வழங்கியதோர் தெற்றமுதத்
தேன்தூறல், 'அள்ளியுண்டே'
செகத்த லைமை ஏற்றிடுவோம்!