பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ.சண்முகம்

14
எது சிம்மாசனம் ?

மகத்தான சாதனைகள் புரிவ தற்கே
வல்லிரும்பு நிகர்த்தான 'ஒழுங்கு' வேண்டும்!
தகராத அசையாத கட்டுப் பாடு,
தர்க்கத்தால் வாக்குவாத மாய்மா லத்தால்
விகசித்தே நம்முள்ளே மலர்ந்திடாது!
விவாதங்கள் விமர்சனங்கள் உதவி செய்யா..!
மிகவாகும் எதிர்ப் பென்னும் பள்ளிக் கூடம்
விளக்குகின்ற பாடந்தான் ஒழுங்காம் நேர்த்தி.!


முன்னேறும் படைவீரன் வெற்றி பற்றி
முச்சந்தி தனில்நின்றே விவாதிப் பானா?
தன்கடமை பங்குபணி அத்த னையும்
தவறாமல் செய்தாலே வெற்றி வாய்க்கும்
என்பதையே அவனுணர்வான் இவ்வாறேதான்
இன்றுள்ள பொறுப்புகளை ஒழுங்காய்ச் செய்தால்
என்றென்றும் மனதுக்குள் குழப்பம் இல்லை!
எதிர்கால அய்யங்கள் தோன்ற மாட்டா!