பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.கோ.சண்முகம்.

22


பூட்டாதே

பூத்தப் புதுமலர்போல் - அன்பு
பொங்கும் இதயமதை
காத்த அருட்கனியாய் - பரிவு
கமழும் இதய அறை
சாத்திப் பூட்டாதே - கெட்டித்
தாழிலே மாட்டாதே
மூத்தால் சாவுவரும் - எல்லாம்
முடிந்து பாழாகும்!

கண்ணீர் உலகுண்டே - அதனைத்
கையால் தழுவிடுவாய்
தண்ணீர்ப் பெயரறியாப் - பாலைத்
தணலின் பரப்பிடையே
வெண்ணிலா நீயாகி - அன்பு
வேதம் ஓதிடுவாய்,
எண்ணம், சொல், செயலை - வாழ்வின்
இசையாய்ப் பொழிந்திடுவாய்!