பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வ.கோ.சண்முகம்

புன்னகைக்குள்

24



சென்றிடுவாய் சென்றிடுவாய்
என் இனிய மகனே
திட்டமிட்ட உன்பயண
ஒளிப்பாதை மேலே!
நின்றிடவோ, தயங்கிடவோ
நேரமில்லை இனிமேல்
நீ தனியே மிக விரைந்து
துணிவுடனே செல்வாய்!

வல்விதியின் வஞ்சகத்தால்
கீழ்விழுந்த மகனே
மனம்ததும்பும் அன்பால்நீ
அழைத்தழைத்தும் யாரும்
சொல்மதித்தே உன்துணைக்கே
வரவில்லை எனினும்
துளிகூட அஞ்சிடாது
சென்றிடுவாய் மேலே!