பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

நடந்து கொண்டே இரு

உண்டிடவும், ஆடிடவும்
அந்நாளில் சூழ்ந்தே
ஒருகோடித் தோழர்களில்
ஒற்றைஒரு ஆளும்
கொண்டநொடிப் பொழுதேனும்
பரிவுணர்வால் இன்று
கூடவர மறுத்திடினும்
சென்றிடுநீ தனியே!

நீண்டுநெளி முள்வழியில்
நடைநடந்து தேய்ந்து
நின்கால்கள் களைத்திளைத்தே
ரத்தமது தோய
பூண்டதுயர் ஆயிரமும்
புன்னகைக்குள் மறைத்தே
பொன்மகனே, உன்பயணம்
தொடர்ந்திடுவாய் மேலே!