பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ. கோ. சண்முகம்

26

வெற்றியின் சன்னதி!

முன்னே செல்லும் மூத்த தோழனே!
மூடிய உதடுகளை மூடியயே வைப்பாய்! பின்னே வந்திடும் பிரிய சோதர!
பேச்சு பித்தளை;மெளனமே பொன்னாம்!

இன்று நாம் உணர்வதை;
இன்று நாம் நினைப்பதை
இதயத் திலேயே வசிக்கச் செய்வோம்! ஒன்றையும் வெளிச்சமாய் உணர்த்திட வேண்டாம்!

எதற்காக அழுவதும் பிள்ளைத்த தனமாம்! ஈர இமைகளே தோல்வியின் ஊஞ்சல்! எதற்காகவும்நாம் தயங்கிட வேண்டாம்! ஏறுவோம்,ஏறுபோல் முன்னே றுவோம் நாம்!

பிளந்து கிடக்கும் மனத்தின் ஓலம்;
பேச இயலா சத்திய விம்மல்;
இழந்திட முடியா மடமையின் வெம்மை, அனைத்தும் கடந்தே அப்பால் போவோம்!