பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.காே.சண்முகம்

30



நடந்து கொண்டே இரு/b>


நடந்து கொண்டே இரு-நீதான்
நடந்து கொண்டே இரு
கடந்தது அனைத்தும் கனவின் குப்பையாய்க்
காற்றின் முதுகில் பின்னே போக
நடந்து கொண்டே இரு! - வெற்றியை
அடைந்து கொண்டே இரு.


அடைத்த கதவுகள் ஆயிர மாயினும்
ஆவேச மூச்சால் முட்டித் திறந்தே
புடைத்த தோள்கள் புடைத்த வாறே
புயலின் கால்களை இரவல் பெற்றே
நடந்து கொண்டே இரு. குறியை
அடைந்து கொண்டே இரு.


தூக்கம் வாழ்வின் துடிப்பைத் தின்றிடத்
துன்பம் வாழ்வின் வெற்றியை மென்றிட
ஏக்கம் வாழ்வின் நஞ்சாய் நின்றிட
எதிரியாய் உனையே படைத்துக் கொள்ளாமல்
நடந்து கொண்டே இரு ஒளியை
அடைந்து கொண்டே இரு.