பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 வ.கோ.சண்முகம் 36

எத்தகைய சோதனைக்கும் சாதனைக்கும் நாமே எப்போதும் முன்னோடும் தூதுவராய் ஆனோம்! வித்தகங்கள்; தத்துவங்கள்; வீரமுறை பலவும் வெளிஉலகின் கைகளிலே நாமீந்தோம் பரிசாய்! கொத்தடிமை கொன்றொழித்தே மக்களாட்சி பொதுமை கொற்றத்தின் அறங்காட்டும் முதல்வர்களாய ஆனோம்! இத்தருணம் - பகைப்பதர்கள் சலசலக்கும் நேரம் இன்னுமொரு அற்புதத்தை நாம்நிகழ்த்த வேண்டும்!

“தீயவரால் நெருக்கடிகள் முற்றுகின்ற இந்நாள் தேசத்தின் செல்வவளம் நிலைத்தெழுந்து பூக்க; காயாக இருக்கின்ற திட்டங்கள் கனியக் கண்ணிமைநேர் படைபலத்தால் பாதுகாப்பே ஓங்க நேயமொடு மனம் திறந்தே மக்களொடு வணிகர் நிறைதொழிலின் அதிபர்களும் முன்னணியில் வந்தே ஆயபல பேருதவி அத்தனையும் செய்தல் அவசரமாம் அவசியமாம் முதற்கடமை ஆகும்!