பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.காே.சண்முகம்

4



இந்தியா என்றும் இறக்காது!


"துணிவு மிகுந்த இளைஞர்களே!
துள்ளி நிமர்ந்தே நில்லுங்கள்!
பணிகளைக் குவிக்கும் கைகளினால்
பாரத நாட்டை உயர்த்துங்கள்!”


“ஒவ்வொரு இளைஞனும் விரனேதான்!
உடையாப் பாறை நெஞ்சோன்தான்!
செவ்வையாம் இலட்சியம் ஒன்றினையே
தேசத்துக் களிக்க வந்தோன்தான்!


"குட்டி நாய்கள் குரைத்தாலும்,
கோடை இடிகள் வெடித்தாலும்
எட்டி அஞ்சி ஓடாதீர்!
எதிலும் கோழை ஆகாதீர்'


என்று முழங்கிய
இமய முரசே!
விவேகா னந்த
வீர ரதமே!