பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51 பரவட்டும் பஞ்சசீலம்! அப்போது இரண்டாம் போர் ஒய்ந்த நேரம்! ஆறாண்டுக் குருதியது காய்ந்த நேரம்! இப்பாரை விழுங்கவந்த பரங்கிக் கூட்டம்'; இங்கிருந்த நரிக்கூட்டம் சாய்த்த பின்னர், ஒப்பந்தக் கைகளையே விரித்துக் கொண்டே உலகத்தினர் வல்லரசு மணடலங்கள் தப்பெண்ணம்; எதிர் கொள்கை;அச்சத் தாலே தனித்தனியே ஈரணியாய் இயங்க லாச்சு! வையத்து நாடனைத்தும் இவ்விரண்டு வல்லரசு மண்டலத்தில் ஒன்றி னோடு கைகுலுக்கி உடன்படிக்கை செய்து கொள்ளும் கட்டாயம் நேர்ந்திடவே, அமைதி மாதா மெய்துடித்து நாதியற்றுக் குமுற லானாள்! விரைவினிலே அமெரிக்காவும் இங்கி லாந்தும் செய்துகொண்ட அமைப்புக்கு வலிவு சேர்க்க நேட்டோவும் 'சீட்டோ”வும் தோன்ற லாச்சு!