பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

நடந்து காெண்டே இரு!



அடக்க விலைக்கும் அரைக்கா சேனும்
அடக்கி விற்றால் இன்றதே வாணிகம்!
முடக்கிய சரக்கை, பதுக்கிய பணத்தை
முற்றிலும் ஈந்தால் இன்றதே தியாகம்!
கொடுக்கும் விருந்தை, கொள்ளும் விருந்தை
குறைத்துக் கொண்டால் இன்றதே பண்பு!
எடுக்கும் செயல்களில், எண்ணும் நினைவில்
'இந்தியா இருந்தால் இன்றதே பக்தி!


நொண்டி கொண்டி வந்துறு 'நிஜத்தை'
நுாறு மணியும் காத்திருந் தேற்போம்!
முண்டி அடித்து முன்னே குதிக்கும்
மொட்டை 'வதந்தி'யை எட்டி உதைப்போம்!
கெண்டை ஒன்று விறாலை விழுங்குமா ?
கேட்பவன் விழித்தால் 'அளப்பவன்'பறப்பான்!
சண்டை நீளினும் அமைதி விறப்பினும்
சத்தியம் மட்டுமே நம்கவசமாகும்!


சீலம் ஐந்தும் அருளிய தேவன்
சிந்தை கவர்ந்த ஜோதி பூமியை
கோலப் பொழிலாம் காஷ்மீர் தன்னை
கொடுமதியாளர்; குரங்குக் குணத்தினர்
நாலங் குலமும் நஞ்சாய்ப் பெற்ற
நாவினர் புரட்டால் நாமா இழப்போம் ?
காலங் குலமும் காஷ்மீர் மண்ணில்
கயவர் ஏந்திடப் போவதே இல்லை!