வ.காே.சண்முகம்
76
மின்னி மினுக்குகின்ற மேனாட்டுப் பொய்ச்சரக்கின்
அச்சாகி நம் கலைகள் ஆபாசக் கூத்தாடும்!
கச்சை அவிழ்த்தெறியும் கண்றாவி மிஞ்சிவிடும்!
கூலியது குறைந்தால் கூப்பாடு போடும் நீ;
ஆலைக் கதவடைப்பு ஆர்ப்பாட்டம் செய்யும் நீ
வயற்காட்டுத் தகறாறில் வழக்காடப் போகும் நீ;
அயலார்கள் ஊடுருவின் அனல் மலையாய் வெடிக்கும் நீ,
களிப்பூட்டும் உன்கலையில் கண்ணியத்தைச் சாகடிக்கும்
வெளிப் புறத்து உறவுகளை விளையாட விடலாமா ?
கண்ணுக்கு கண்தோறும் காட்சிகளின் ருசிமாறும்!
மண்ணுக்கு மண்தோறும் மனப்பண்பின் பசிமாறும்!
பைந்தமிழ் குரல்கொடுக்கக் காற்றோடு கொஞ்சிவரும்
பைரவியின் போதையதைப் பட்டாசு தந்திடுமோ ?
நாமுண்டு! நம் கலையின் நல்லதொரு மரபுண்டு!!
சேமங்கள் அத்தனைக்கும் திருக்கோயில் அதுவாகும்!
இருந்து வரும் பழங்கலைகள்; இன்று வரும் புதுக்கலைகள்
பொருந்தத்தரும் நலமான பொலிவை வலிவை யெல்லாம்
அள்ளி இனி வழங்குதற்கே அச்சாணி எனத்தகும் நீ
துள்ளி எழுந்திராடா! தோள்தட்டிப் புரட்சியிடு!