பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.காே.சண்முகம்

78




சத்தில்லாக் - கருவில்லாச் சக்கை தன்னை
சக்கரத்தின் சுழற்சிபோ லொரே கதையை
'சத்திரத்தின் மறுபிறவி'உணவகத்தில்
சட்டினிக்கும், பொறியலுக்கும், சாம்பா ருக்கும்
கத்திரிக்காய் எடுக்கின்ற அவதா ரம்போல்
'காதல்வகை முக்கோணக்' குப்பை யையே
எத்தனையோ தலைப்புகளில் எடுத்தெ டுத்தே
ஏய்க்கின்றார், தேய்க்கின்றார் கலைத்துறையை!


பத்தெட்டுச் 'சிறுபசங்கள்' கூடிக்கொண்டே,
பதினெட்டாம் பெருக்கன்றோர் அட்டைத் தேரின்
மத்தியிலே 'சாமி’ எனச் சிறுப டத்தை
மாட்டிவைத் தலங்கரித்தே இழுத்த லைவார்!
சத்தமிட் டுக் கூத்தடிப்பார்! - அதனைப் போல
'ஸ்டார் நடிகர்; சதைக் காட்சி இரண்டை மட்டும்
அத்திவார பலமாக்க கருதிக் கொண்டு
'ஆஹா ஹா இது வேகலை!' என்கின்றார்கள்!


5