பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.காே.சண்முகம்

82



திசைகளின் கூத்து!


எடுப்பு :


இன்றொரு நாளும் பூத்ததடா! - வாழ்வாம்
இன்கனித் தோட்ட பாத்தியிலே...

(இன்றொரு நாளும்)


தாெடுப்பு :


கன்றாய் நட்ட அறத்தின் கொடியில் - அதன்
காப்பாய் இட்ட கருணையின் மடியில்...

(இன்றொரு நாளும்)


முடிப்பு :1


காலமாம் புயலின் கைகளில் விழாமல்
கயமையாம் வெயிலின் சூட்டினில் படாமல்
ஞாலமே தொழுதிடும் குறள்மறை போலே
நறுமணத் தென்றல் வருவதைப் போலே...

(இன்றொரு நாளும்)