பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.காே.சண்முகம்

84



அகிலத்தின் அரசி!


எடுப்பு :


பூ பழ தாம்பூல சந்தனம் - படைத்துனைப்
போற்றுகின்றோம் எந்தாயே! வந்தனம்! வந்தனம் !!


(பூ பழ தாம்பூல)


தொடுப்பு :


மாபெரும் பாரத மங்கள மாதா! - நாங்கள்
வாழ்வுற அருள்தவழ் மந்திரம் தா! தா!!

(பூ பழ தாம்பூல)


முடிப்பு :1

கங்கையின் கோதுமையாய் உதிரம் தருவாயே!
காவிரியினர் நெல்லாக உயிர்க்கொடு ப்பாயே!
திங்கள்தோய் இமயமாய்த் தெண்கடல் குமரியாய்த்
திகழ்ந்தோங்கும் நியண்றோ அகிலத்தின்
அரசியாம்!...

(பூ பழ தாம்பூல)