இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்
1. 'ஒவ்வோர் கலைஞர்கள்'
சிறையில் இருந்தபோது, ‘பெரியார் மனம் வைத்தால் சீக்கிரமாக விடுதலையாகிவிடலாம்’ என்று நீங்கள் நினைத்ததுண்டா?”
“இல்லை; நான் யாருடைய தயவிலும், சிபாரிசிலும், கருணையிலும் எப்போதுமே வாழ்ந்தவனுமல்ல; வாழ நினைப்பவனுமல்ல?”
“முதல்வர் கருணாநிதியைப் பற்றி...”
“ஒரு காலத்தில் அவர் என் கம்பெனி ஆக்டர்; இன்று இந்த நாட்டின் முதலமைச்சர். என் கம்பெனி ஆக்டர் முதலமைச்சராயிருக்கிறார் என்றால் அதிலே எனக்குப் பெருமைதானே?”
“சரி, கலை உலகத்துக்கு வருவதற்கு முன்னால் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ?”
“வீட்டுக்கு அடங்காத பிள்ளையாயிருந்தேன். ஸ்கூலுக்குப் போவதில்லை. ராபர்ட் கிளைவ் மாதிரி துடுக்குத்தனமாக ஏதாவது பேசிக்கிட்டிருக்கிறதே என் பொழுது போக்காயிருந்தது."