சிறைச்சாலைச் சித்தனைகள்
115
“இப்போ மட்டும் என்ன, நான் கெட்டாப் போயிட்டேன் ? என்னிக்கும் இருக்கிறபடிதான் இன்னிக்கும் இருக்கேன்...
“சரி, கோவையிலிருந்து எங்கே வந்தீர்கள்?”
“நாகப்பட்டினத்துக்கு வந்தேன். அங்கே தண்டபாணி செட்டியார்னு ஒரு தனவந்தர் இருந்தார். அவருடைய உதவியைக் கொண்டு ‘விமலா, அல்லது விதவையின் கண்ணீர்’ என்று ஒரு சீர்திருத்த நாடகத்தைத் தயாரித்தேன். அதுக்குள்ளே ஊர் முழுக்க அதே பேச்சாப் போச்சு! இது என்ன அநியாயம்! இந்த ராதா விமலா அல்லது விதவையின் கண்ணீர்னு நாடகம் நடத்தறதாவது, அதை இந்த ஊர் பார்த்துக்கிட்டிருக்கிறதாவது ? அவன் எல்லாத்துக்கும் துணிஞ்சவன் ஆச்சே! அந்த நாடகத்திலே அவன் தாலியறுத்தவளுக்குத் தாலிகூடக் கட்டி வைப்பானே ? அதை நடத்த விடாம எப்படியாவது தடுக்கணும்னு எல்லாரும் பேச ஆரம்பிச்சிட்டாங்க. அப்போ நாட்டிலே பெரியாருக்கும் அவ்வளவு செல்வாக்கு இல்லே, அவருடைய திராவிடர் கழகத்துக்கும் அவ்வளவு செல்வாக்கு இல்லே. அதாலேச. தடை,கிடை'ன்னு சொன்னதும் அவங்களும் பயந்தாங்க. அவங்களிலே சில பேர் என்கிட்டே வந்து, ‘என்னத்துக்கு வீண் வம்புக்குப் போங்க ? இன்னும் கொஞ்ச நாள் பொறுத்தே இந்த ‘மாதிரி நாடகங்களை நடத்தலாமே'ன்னு சொன்னாங்க. இந்த ஒரு விஷயத்திலே மட்டும் நான் எப்பவுமே காந்தியாரின் கட்சி. அவன் என்ன சொன்னார் ? ‘வீரன் ஒரே தடவை சாகிறான்; கோழை நிமிஷத்துக்கு நிமிஷம் செத்துக்கிட்டிருக்கான்'னு சொல்லலையா ?, அதாலே முன்னால் வைத்த காலை நான் பின்னால் வைக்க விரும்பலே, எத்தனை எதிர்ப்பு இருந்தாலும் நாடகத்தை எப்படியும் அரங்கேற்றியே தீர்றது'ன்னு ஒரு தேதியைக் குறிப்பிட்டு விளம்பரம் சேஞ்சேன்..."