இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
126
விந்தன்
இங்கிருந்து ஒண்னுமா எடுத்து, உடைச்சி விறகாக்கி அடுப்பெரிய விட்டோம்...”
“அநியாயமாகவல்லவா இருக்கிறது. இது ?”
‘இல்லேன்னா. எங்க வயிறு எரியறேங்கிறதே!”
“அதற்காக... ?
“நாங்க செய்ததும் தப்புத்தான், என்ன செய்யறது? அப்போ காலம் அப்படியிருந்தது. “
“சரி, அப்புறம் ?”
“எதிர்பாராத விதமா கணேசய்யர்கிட்டேயிருந்து ஒரு ஆள் வந்து, ‘அய்யர் உங்களை உடனே அழைச்சிக்கிட்டு வரச் சொன்னாருன்னு சொன்னான். அவ்வளவுதான்; அந்தக் ‘கண் கண்ட தெய்வ'த்தைக் காண அப்பவே நான் அவனோடே புறப்பட்டுப் போனேன்."