பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைச்சாலைச் சிந்தனைகள்

11


"விளம்பரம் கலைஞனைத் தேடி வந்தது அந்தக் காலம்; கலைஞன் விளம்பரத்தைத் தேடி ஓடறது இந்தக் காலம்.”

“மேடை நாடகங்களில் நீங்கள் யாரை யாரையெல்லாம் சந்தித்தீர்கள் ? அவர்களுக்கும் உங்களுக்கும் இடையே இருந்த தொடர்புகள் என்னென்ன?”

“மேடை நாடகங்களில் குரங்காட்டம் போட்டவர்களையும், கொள்கையில்லாக் கூத்தாடிகளையும் நான் சந்தித்திருக்கிறேன். அவர்களுக்கும் எனக்கும் இடையே இருந்த ஒரே தொடர்பு ‘அரிதாரம் பூசறது தான்.”

“அதைத் தவிர... ?” “வெட்டுப் பாறையில் கோவலன் பாடிக்கொண்டே செத்துவிடுவான். ‘ஆடிட்டோரிய'த்திலிருந்து ‘ஒன்ஸ்மோர்’ குரல் வரும்; மாண்டவன் மீண்டும் எழுந்து பாடுவான்!”

“இந்த ஒன்ஸ்மோர் கலைஞர்களைத் தவிர... “

“பெருமைக்குரிய கலைஞர்கள் சிலரையும் நான் சந்தித்திருக்கிறேன்; அவர்களைப் பற்றிப் பின்னால் சொல்கிறேன்.”

“நீண்ட நாட்களாக நீங்கள் திரை உலகத்துக்கு வராமல் இருந்தது ஏன் ? வந்தாலும் இடையிடையே விட்டுவிட்டுப் போய்விட்டது ஏன்?”

“டிராமாங்கிறது எனக்கு ‘பெர்மெனென்ட் ஹவுஸ்'; சினிமாங்கிறது ‘டெம்பரரி கேம்ப்’. இருந்தாலும் ராஜசேகரன், சத்தியவாணி, சந்தனத் தேவன், பம்பாய் மெயில், சோகாமேளர் போன்ற அந்த நாள் படங்களிலேயே நான் நடித்திருக்கிறேன்!"