பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சிந்தனைகள்

85


பேனே ‘ன்னார். காமிரா மேன், ‘ஐ சே, யு டேக், கமான், ரெடி’ ன்னு கத்தினார் டைரக்டர். பய வஞ்சம் தீர்க்கப் பார்க்கிறான்னு எனக்குப் புரிஞ்சிப் போச்சு. ஆனாலும் நான் அஞ்சலே. ‘கமான், ரெடி’ ன்னு குதிரை மேலே தாவி ஏறினேன். அதன் மேலேயிருந்து மறுபடியும் மாடிக்கு ‘ஜம்ப்’ பண்ணி, அங்கே இருந்த ஆட்களோடு மறுபடியும் சண்டை போட்டுட்டு, மறுபடியும் குதிரை மேலே குதிச்சேன், அவ்வளவு தான் எனக்குத் தெரியும்; அதுக்கு மேலே அன்னிக்கு என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. நாலைந்து நாட்களுக்கு அப்புறம் கண் விழிச்சிப் பார்த்தப்போ, கால் ஒடிஞ்சி நான் ஆஸ்பத்திரியிலே இருப்பது தான் தெரிஞ்சது!"