பக்கம்:நந்திவர்மன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

அமை :- நேரடியானதென்றால் நாங்கள் இருக் கிருேமே! தங்களையேன் வரவழைக்கிருேம்? மறைமுக மாக-ஏதாவது செய்ய வேண்டும் சுவாமி !

பங்கை : எனக்கு வெற்றி தேடித்தர வேண்டும் சுவாமி கப்பம் கட்டுவதையும் நிறுத்தி விட்டேன், தங்களை நம்பி !

மைத் :- (சிரித்து) என்ன நம்புகிறாய் மன்ன! நன்று செய்தாய் ! நம்பு! நம்பிக்கை வீண்போகாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் ! (யோசித்து) இது ஒரு நல்ல சந்தர்ப்பம்தான் !

பங்கை : தங்கள் கருத்து ?

மைத் : நந்திவர்மனிடம் வெறுப்புக் கொண்டவர் கள் அங்கே உண்டு; சதிக்குச் சித்தமாக சகோதரர்களே இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவன் புலவன் சந்திர வர்மன் , சாமர்த்தியசாலி அண்ணனை கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்ற விரும்பும் அந்தக் கவிஞனைப் பகடையாக்கிவிட்டால்......பல்லவநாடு சாளுக்கியருக்குச் சொந்தம் !

பங்கை : சபாஷ் இதெல்லாம் எங் களு க் குத் தெரியவில்லையே! இதற்குத்தான் இந்தப் பங்கையன் தங்களை நாடியது புறப்படுங்கள் : இப்போதே புறப் படுங்கள் சுவாமி காஞ்சிக்கு !

மைத் : மிக்க நன்று! எனக்குரிய அரசியல் அதி காரம்? வாகன வசதிகள்? இங்கே குடும்ப சம்ரகஷ்ன? அங்கே ஏராளமாக செலவாகுமே, பொருள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/19&oldid=671956" இலிருந்து மீள்விக்கப்பட்டது