பக்கம்:நந்திவர்மன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

சீன - எங்கள் நாட்டு பெளத்தருக்காக முன்னர் மகாராஜா புத் த க யா கட்டினுங்க; இப்போ அதை வைணவர்கள் கைப்பத்த முயற்சிக்கிருங்க, நீங்கதான் காப்பாத்தனும் !

கந்தி :- அஞ்சவேண்டாம்! மாவேந்தர் நரசிம்ம வர்ம சக்கரவர்த்தி வகுத்தவழி துர்க்கப்படுவதற்கு இந்த நந்திவர்மன் துணைபுரியமாட்டான் ! உங்கள் உரிமை உங்களுக்கே கிடைக்கச் செய்கிறேன். சென்று வாருங்கள் !

னே : சந்தோஷம் மகாராஜா சரணம்! சரணம்! (இருவரும் வணங்கிச் செல்கின்றனர்).

15ங்தி : சீலாதித்தரே “நாகபபட்டினம் பெளத்த விவகாரம் பெளத்தர்களிடமே விடப்பட வேண்டும். அதிலே வைணவர்கள் தலையிடக் கூடாது கருமத் தலைவரிடம் கூறி இதனைக் கட்டளையாக அனுப்பச் செய் யும் நாகைச் சான்றாேர்க்கு !

சீலா :- நன்று !

(மன்னர் எழுந்து செல்கிறார்.)

விக்கி : புத்த பகவானுக்கு நாமம்! (சிரித்து) பாவம்! விஷ்ணுவின் பத்து அவதாரங்களிலே அதுவும் ஒன்று என்பது அவர்களது கற்பனை பயல்கள் போட் டாலும் போட்டார்கள்; நாமத்திற்கு பதிலாக விபூதிப் பட்டை போட்டிருந்தாலும், ஒப்புக் கொள்ளலாம் : இல்லையா அமைச்சரே ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/23&oldid=671972" இலிருந்து மீள்விக்கப்பட்டது